Tuesday 9 August 2016








மிகப்பெரிய வெற்றி

(அ )   BSNL  ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம் அளிக்கும் பொறுப்பு அரசினுடையதே என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 ( ஆ ) DOT  யில் ஒய்வு பெற்றவர்களுக்கும் ஓய்வூதியம் தரும் பொறுப்பு BSNL  க்கே என்ற 2006 ஆம் ஆண்டு உத்தரவு ரத்து செய்யப்பட்டு ள்ளது. மிகப்பெரிய வெற்றியாகும் 

(இ ) BSNL -லிருந்து அரசுக்கு செல்லும் வருவாயில் ஓய்வூதிய செலவு 60 சதத்திற்கு மிகாமல் இருக்க  வேண்டும் என்ற 2006 ஆம் ஆண்டு உத்திரவு செல்லாக்காசாக்கப்பட்டுள்ள்ளது.

(ஈ )  சேவையிலுள்ள சங்கங்களுடன் போடப்பட்ட போராட்ட உடன்பாட்டில் 78.2% அகவிலைப்படி BSNL   ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும் என்ற வாசகத்தை நீக்கி  விட்டு தீர்மானத்தை அனுப்பும்படி உத்தரவிட்ட அதே   DOT இப்போது 78.2% அகவிலை ப்படியினை  நமக்கும் இணைக்க ஒப்புதலளித்துள்ளது .

( உ )  ஒவ்வொரு முறையும்  BSNL  ஓய்வூதிய உயர்வுகளுக்கு போராடித்தான் பெற வேண்டும் என்ற நிலை இனி வரும்   காலங்ளில்  தவிர்க்கப்படும்.

(எ )  இதன் மூலம்  1,80,000  ஓய்ஊதியர்கள் கூடுதல் ஓய்வூதியம் பெற்று பலனடைவார்கள்.

பணப்பலன் மட்டுமல்லாமல் பென்ஷன் கொள்கையில் அடிப்படையான மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மிகப்பெரிய வெற்றியாக எல்லோராலும் போற்றப்படுகிறது , வரவேற்கப்படுகிறது .

இன்னும் நம் முன் உள்ள  கடமைகள்  ???

தோழமை வாழ்த்துக்களுடன் 
பி.அருணாச்சலம் 
தலைவர்,
தமிழ் மாநில மாநாடு வரவேற்பு குழு 
94430 59011

ஆர்.திருவேங்கடேசாமி ,
கோவை மாவட்ட செயலாளர் 
94871 64321

கே .சிவக்குமாரன் 
பொருளாளர் , தமிழ் மாநில மாநாடு வரவேற்புக்குழு 
94861 05119



No comments:

Post a Comment