Friday 12 August 2016


     ஓய்வூதியர்கள் மருத்துவ பில்களை பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என BSNL கார்பொரேட் அலுவலகம் 10-08-2016 அன்று உத்தரவீஇட்டுள்ளது.

      மேலும் ஓய்வூதியர்கள் மருத்துவ பில் கோரிக்கைகளின் நிலைமையினை அறியவும் , பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆன் லைன் மூலமாக கண்காணிக்கவும்   ஒரு மென்பொருள் உருவாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சேவையில் இருக்கும் ஊழியர்களுக்கு 01-10-2016 லிருந்து வீட்டு  வாடகைப்படியை 78.2 % அடிப்படையில் அளிக்க  வேண்டும் என்று உத்தரவு வெளியாகி உள்ளது.

ஆகஸ்டு 15, சுதந்திர தினத்திலிருந்து BSNL  லாண்ட் லைன் தொலை பேசியிலிருந்து எல்லா ஞாயிற்று கிழமைகளிலும் எந்த ஒரு நெட் ஒர்க் தொலைபேசிக்கும் ( லாண்ட் லைன் போன் அல்லது கைப்பேசி ) இலவசமாக தொலைபேசியில் பேசும்   சலுகையை  BSNL அளிக்க உள்ளது.

AIBSNLPWA  
Kovai Division
12-08-2016




No comments:

Post a Comment