Tuesday 2 August 2016


 01-08-2016 அன்று காலை கோவை மெயின் தொலைபேசி நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள தாமஸ் ஹாலில் நம் ஓய்வூதியர் சங்கம் சார்பாக 78.2% பெற்ற வெற்றி மற்றும் 60:40 உத்தரவு நீக்கப்பட்டது குறித்த மிகப்பெரிய வெற்றி  கொண்டாட்ட கூட்டம் நடைபெற்றது.
பெரும் திரளான கூட்டத்தில் நம் மத்திய சங்க துணைத்தலைவர்
தோழர் டி .கோபாலகிருஷ்ணன் ,
 மத்திய சங்க துணைசசெயலர்
தோழர் எஸ்.அருணாச்சலம் ,
மதுரை மாவட்ட துணைசசெயலர்
தோழர் வீராசாமி 
ஆகியோர்  நாம் நடத்திய பல்வேறு அறக்கட்ட போராட்டங்கள், தர்ணாக்கள்,அஞ்சலட்டைப் போராட்டங்கள்,பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு அதிகாரிகளை, அமைச்சர்களை,நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தது,கோரிக்கை மனுக்களை அளித்தது, கர்நாடக தோழர்கள் மூலமாக மத்திய அமைச்சர் மாண்புமிகு ஆனந்தகுமார் அவர்களை அடிக்கடி டில்லியில் மற்றும் பெங்களுருவில் சந்தித்து நம் கோரிக்கைகளை தன்மையாக எடுத்துரைத்து அவர் உதவியைப்பெற்று அதன் மூலமாக காரியமாற்றி நாம் பெற்ற வெற்றியினை மிக விவரமாக எடுத்துரைத்தனர் .கூட்டத்திற்கு  திரளாக ( 40க்கு மேற்பட்ட பெண் ஓய்வூதியர் உட்பட) வந்திருந்த அனைத்து ஓய்வூதியர்களும் மிக ஆர்வமாக  கேட்டறிந்தார்கள் .
ஆகஸ்டு மாதம் பிறந்த நாள் வருகிற நம் தோழர்களின் பட்டியல் வாசிக்கப்பட்டு மிகுந்த கரவொலியுடன் அவர்களின் பிறந்த நாள் கேக் வெட்டி மற்றும் அவர்களுக்கு நம் சங்கத்தின் சார்பாக ஒரு தட்டு , நினைவு பரிசாக அளித்து கொண்டாடப்பட்டது ..
கூட்டம் முடிவுற்றபின் மதிய உணவு பரிமாறப்பட்டது. உணவிற்கான செலவினை பிறந்த நாள் கொண்டாடிய தோழர்கள் சுமார் பத்து பேர்கள் நன்கொடை மூலம் பகிர்ந்து கொண்டனர் .
இம்மாதம் 23 மற்றும் 24 தேதிகளில் கோவையில் பிரமாண்டமாக நடைபெற இருக்கும் தமிழ் மாநில மாநாட்டினை மிக சிறப்பாக நடத்திக்கொடுக்க உதவிகள் செய்வதாக உறுதி எடுத்து சென்றனர்.

தோழமை வாழ்த்துக்களுடன் 
R திருவேங்கடசாமி  ,
மாவட்ட செயலர் 
AIBSNLPWA 
கோவை மாவட்டம்
94871 64321

No comments:

Post a Comment