Friday 31 May 2019

The Lists of Empanelled  Lists Hospitals in Coimbatore are given below in 3 pages.
First page refers to Credit Facility.
Pages Two and Three are for Pay and reimburse category.
          PAGE 1
                                           PAGE 2
                                        PAGE 3
With warm fraternal Greetings,
R.Thiruvenkatasamy,
District Secretary.
நம் தொலைத் தொடர்பு துறைக்கு காபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் கிடைத்துள்ளார் .
மாண்புமிகு ரவி சங்கர் பிரசாத் அவர்கள் தொலைத் தொடர்பு துறைக்கான காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 
வரவேற்கிறோம் அவர் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.  

Thursday 30 May 2019


(S-12-க்கு ரூ 6500 - 105 00 சம்பள விகிதம்)
6வது ஊதியக் குழு தனது அறிக்கையை குறிப்பிட்ட காலத்தில் சமர்பித்தது. மத்திய சேவையில் பலதரப்பட்ட கேடர்களின் இயற்கைத் தன்மை  மற்றும் பொறுப்புகளை கவனத்தில் கொள்ளாமல் 6-வது ஊதியக் குழுவில் ஓய்வு பெற்ற நீதியரசர்B.N.கிருஷ்ணா தலைமையிலான குழு சம்பள விகிதங்களை பரிந்துரை செய்தது.
அதனையொட்டி  அவர்கள் ஒரு சிறிய சம்பள அளவீட்டை நிர்ணயம் செய்தார்கள் .
அதாவது 31.12.2005 ல் அடிப்படை சம்பளம்  மற்றும் பஞ்சபடி  ஆகியவற்றை  கூட்டி  அதன் மூலம்  கிரேடு  சம்பளம்   ( GRADE PAY) என்ற புதிய விகிதத்தை  அமல்படுத்தினார்கள்

அதே சமயம் ஓய்வூதியர்களுக்கு 6-வது சம்பளக்குழு  40 சத வீத  அடிப்படை பென்சனாக ,சராசரியான சலுகையாக  அறிவித்தது .

 
இதன் மூலம் ரூ.5000 அடிப்படை சம்பளம் பெறும் பணியில் உள்ள
 
ஊழியர்க்கு ரூ.4200- (84% அடிப்படை சம்பளம்) கிரேடு சம்பளமாக உயர்த்தி அதனுடன் வீட்டு வாடகைப்படி மற்றும் இதர படிகளுக்கு ஏற்ற உயர்வுகளையும் கூடுதலாக பெற வழி ஏற்பட்டது.

அடிப்படை பென்சனாக ரூ.5000/- பெறும் பென்சனருக்கு ரூ.2000/- மட்டுமே உயர்வு கிடைத்தது. இது ஓய்வூதியர்களுக்கு 6-வது சம்பளக்குழு அளித்த கொடூரமான அநீதி.

     6500-10500
சம்பள அளவீட்டிற்கு முதலில் ரூ.4200/- தான் கிரேடு
 
சம்பளமாக தந்தார்கள். பிறகு 13-11-2009 அன்று நிதியமைச்சகம்
வெளியிட்ட உத்தரவு மூலம் அந்த கிரேடு சம்பளம் ரூ.4600/- ஆக உயர்த்தப்பட்டது,
ஆனால், 2017-ல் 7-வது சம்பளக் குழுவின் படி பென்சன் மாற்றம்
எனும் போது, பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை ரூ.6500-10500
 
சம்பள விகிதத்திற்கு இணக்கமான அட்டவனை தயாரித்த போது,
கிரேடு சம்பளமாக ரூ.4200/-தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

உடனடியாக இதை நமது AIBSNLPWA சங்கம் குறிப்பிட்டு, பாரத பென்சனர் சமாஜ் மூலம் பிரச்சனையை தந்தது - SCOVA அமைப்பில் உறுப்பினராக உள்ள கர்நாடக P&Tபென்சனர் அமைப்பும் இப்பிரச்சனையை எழுப்பியது. தங்களுடைய நிலைப்பாட்டிலிருந்து மாற்றம் செய்ய பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை முன்வரவில்லை.

இதனால் பாதிப்புக்கு உள்ளான சில பென்சனர்கள் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT)  சென்றனர். அனைத்து வழக்குகளையும் விசாரித்த CAT, மாற்றப்பட்ட கிரேடு சம்பளமான ரூ.4600/- வழங்க அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

தற்போது, செலவின மற்றும் நிதியமைச்சக துறை, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறையும் அட்டவணை 24 & 25 களை மாற்றி சுற்றறிக்கை மூலம் தெரிவிக்க உள்ளது. அதன் பிறகே,01.01.2016 முதல் பென்சன் மாற்றம் செய்ய CCA முன் வரும்.

இச் சலுகை யாருக்கு கிடைக்கும்?
கிரேடு - IV பதவியிலிருந்து பணி ஓய்வு பெற்ற DOTபென்சனர்கள் பலனடைவார்கள். அக்டோபர் - 1990-க்கு முன்பாக மிகச் சிலரே டெலிகாம் துறையில் இந்த கிரேடு -IV -ல் இருந்தனர் (சம்பள விகித ரூ.2000 - 3200 & 2000 - 3500).-
1990-
ல் BCR அறிமுகப்படுத்தப்பட்டது . கிரேடு - III-ல் உள்ள 10 சதவீதத்தினர் கிரேடு - I V-க்கு அமர்த்தப்பட்டனர். பிறகு 01-01-1996 முதல் அவர்கள் 6500 - 10500 சம்பள விகிதம் பெற்றனர். 01.10.2000-க்கு முன்பாக கிரேடு -IV - லிருந்து ஓய்வு பெற்றவர்களும் தற்போது அவர்களின் பென்சனில் இந்த உயர்வு பெறுவர்.பென்சன் மற்றும் பென்சன் நலத்துறை இந்த மாற்றப்பட்ட அட்டவனையை வெளியிட்ட பிறகு, உரிய பென்சனர்கள் அவரவர் CCA-க்களிடம் உரிய ஆவணங்களோடு மனுச் செய்ய வேண்டும்.
குறிப்பு :
01.10.2000-
க்கு பின் ஓய்வு பெற்ற BSNL ஊழியருக்கு மேற்கண்டவை பொருந்தாது. ஏனென்றால் அப்போது BSNL -ல் கிரேடு சம்பளம் நடைமுறையில் இல்லை.

நன்றி :
மத்திய சங்க செய்தி:
 
தமிழாக்கம் = .அன்பழகன், மாவட்டச் செயலர், புதுச்சேரி


Saturday 25 May 2019

CHQ calls upon all members all over the country to donate liberally to the Odisha Relief fund immediately. Branch Secretaries are requested to collect the same and remit the entire amount to the Current Account opened by our Odisha circle branch for the purpose. The details are available in he Special circular given below.
With Regards,
P Gangadhara Rao, 
General Secretary

பென்சனுக்கு வரி விதிப்பதை எதிர்த்து  ஒரு சொல்  :
பென்சனர்களுக்கு நேரடி வரி விதிப்பு பற்றி பென்சன் மற்றும் பென்சனர்நலத்துறை கர்நாடக P&Tபென்சனர் சங்க பொதுச் செயலரும், SCOVA அமைப்பின் உறுப்பினருமான தோழர் k. B. கிருஷ்ணராவ் அவர்களிடம்கருத்துஆலோசனைகளை கேட்டுள்ளதுஇதுபற்றி வருமானத்துறையிடம்  பட்ஜெட் உருவாக்கத்தில் வைப்பதற்கு உதவும் என கேட்கப்பட்டுள்ளதுதோழர்.கிருஷ்ணாராவ் அவர்கள் நமது AIBSNLPWA சங்கத்திடம்கருத்துக்களையும்ஆலோசனைகளையும் கேட்டுள்ளார்நமது சங்கமும்கீழ்கண்ட ஆலோசனைகளையும் அதற்கான காரணங்களையும்தெரிவித்துள்ளது :
ஆலோசனை :
முன்னாள் அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசேபென்சன் வழங்குவதால் அதற்கு வரி விதிக்கக் கூடாது.

காரணங்கள் :
1. பென்சன் சம்பளம் அல்லஅப்படியே சம்பளமாக கருதப்பட்டாலும்அதுதரப்பட வேண்டியபட்டு வாடாவே என நீதிமன்றம் கருதியதுகாலதாமதப்படுத்தப்பட்ட நிலுவை சம்பளம் அல்லது பென்சன் பட்டுவாடாசெய்யும்போது ஊழியர் தம் படிவம் 10E - ன் படி . குறிப்பிட்ட வருடத்திற்கானஆய்வின் மொத்த தொகையையும் கணக்கிடுவது கிடையாது.

2. முன்னாள் MP-க்கள்அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும்பென்சனுக்கு வரி கிடையாதுஏனென்றால் " பென்சன் சம்பளம் அல்லஇதரவழியாக (other sources)  கிடைக்கும் வருமானம்,, என கருதப்படுகிறதுஇதரவழியாக (othersources) என்பது ஒன்றுமில்லைஅரசு நிதியிலிருந்து தான்தரப்படுகிறதுஇந்திய அரசுஅரசின் நிதியிலிருந்து தான் அவர்களுக்குபென்சன் தரப்படுகிறதே ஒழியஅவர்களை தேர்வு செய்த மக்களிடமிருந்துஅல்லஅவ்வாறே அவர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியத்தைஇந்திய அரசு தான் வழங்குகிறதுஅதே சமயம்பதவியில் உள்ள MP-க்கள் Ex-MP-க்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும்மருத்துவசலுகைகள் CGHS மூலம் மத்திய அரசு ஊழியர்கள்பென்சனர்களுக்குநிகரான சலுகைகள் தரப்படுகிறதுமுன்னாள் MP, மற்றும் அவர்களதுகுடும்பத்தினர்களுக்கு வழங்கப்படும் பென்சனுக்கு வரி விதிக்காதபட்சத்தில்அதே அரசில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் அவர்களதுகுடும்பத்தினர் பெறும் பென்சனுக்கும் வரி விதிப்பது நியாயமில்லை.

3. பிரேசில்ரஷ்ய கூட்டமைப்புஇலங்கை மற்றும் USA -வில் உள்ளமாகாணங்களிலும் பென்சனுக்கு வரி விதிப்பது கிடையாது .
தமிழாக்கம்.அன்பழகன்மாவட்டச் செயலர்புதுச்சேரி
Article appearing in CHQ web site is  translated in Tamil By DS Pondy.