Sunday 29 March 2020

APPEAL FROM CHQ
Some District Secretaries wanted an appeal to be sent for donations. CHQ is enclosing an EXTRA ORDINARY APPEAL. All Circle/ District Secretaries are requested to take this appeal seriously and do the needful.
P Gangadhara Rao,   GS.
AN APPEAL FROM TAMILNADU CIRCLE
அன்புள்ள தோழர்களே, நமது அகில இந்திய சங்கம் கொள்ளை நோயான கொரனவை எதிர் கொள்ள மத்திய, மாநில அரசுகள் போர்கால நடவடிக்கை எடுத்து வருகின்றன. நமது அமைப்பு எப்போதுமே இது போன்ற தருணங்களில் நிதியை வழங்கி உள்ளது. இன்று எவரும் வெளிய வரமுடியாத சூழலில் உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள்
இம்மாதம் நாம் வாங்கும் ஓய்வுதியத்தில் ஒரு நாள் ஊதிய த்தை தமிழக முதலைமைச்சரின் Covid 19, நிவாரண நிதிக்கு வழங்குமாறு அன்புடன் மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. நாடு ஒரு பேரழிவை ஒழிக்க மும்முரமாய் இருக்கும்போது நாம் ஒன்றாய் எழுந்து நின்று கை கொடுப்போம். Online ல் செலுத்த முடிந்தோர் நமது மாநில சங்க கணக்கிற்க்கு உடனடியாக அனுப்பி வைக்கவும். நெட் பாங்கிங் வசதி இல்லாதவர்கள் , ஊரடங்கு சட்டம் நீக்கிய பிறகு வங்கிக்கு சென்று Money Transfer செய்யலாம்.  மாவட்ட செயலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும்.
நம்மால் முடியும். தேசம் நமது. கொடிய நோயை அறவே அகற்றும் புனித போரில் நாம் முன்நிற்போம். 
தோழமை வாழ்த்துக்களுடன்,
வீ ராமராவ் மாநில தலைவர்
ஆர் வெங்கடாச்சலம், மாநில செயலாளர்.
Account Name: All India BSNL  Pensioners Welfare Association, Tamilnadu circle.
Name of the Bank     : City Union Bank,
Branch Name             : Nanganallur branch, Chennai 61
SB A/C Account No :    104001000409247.    
IFSC                            : CIUB0000104.
An Appeal From District Association
வணக்கம் அருமைத்தோழர்களே,
பணிவான வேண்டுகோள்...
1.கொரோனா என்ற மாபெரும் அரக்கனின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க நம்மை மத்திய மாநில அரசுகள் ஏப்ரல் 14 வரை (அத்தியாவசியப் பொருட்களின் தேவையன்றிதேவையில்லாமல் படி தாண்டக்கூடாது என்று 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுலட்சுமணன் போட்ட கோட்டை சீதை தாண்டியதால் இராவணனால் துன்பம் வந்ததுபிரதமர் தமிழக  முதல்வரின் கோடுகளை (144) தாண்டாமல் கலியுக இராவணனிடமிருந்து (கொரோனா) நம்மை பாதுகாத்து கொள்வோம்இந்த சூழ்நிலையில் நம் அங்கத்தினர் ஒவ்வொருவரும் அகில இந்திய பொதுச்செயலர் திரு. கங்காதரராவ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ஒரு நாள் ஓய்வூதியத்தை மாநில சங்கத்தின் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


 வேண்டுகோள்..2...
இந்த வைரஸின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உங்கள் அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கை மாமன் மைத்துனன் மற்றும் உயிர் நண்பர்கள் என்று எத்தனை பேர் வெளியே வரமுடியாமல் இருப்பர்வேலை இன்றி பட்டினியால் வாடுவோரும் இருப்பர். அவர்களுக்கு உணவும் மருந்தும் வாங்கி கொடுத்து (அவர்களிடம் மனஸ்தாபம் இருந்தால் கூட அதை மனதில் கொள்ளாமல்) உதவினீர்கள் என்றால் உங்களுக்கு புண்ணியம். இந்த உலகில் போதும் என்று சொல்லக்கூடியது உணவு  ஒன்றுதான்உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பார்கள்
நன்றி!
ஆர்திருவேங்கடசாமி செயலாளர் 
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கம்,
கோவை மாவட்டம் 

No comments:

Post a Comment