Wednesday 12 June 2019


நமது சங்கத் தலைவர்கள் மத்திய அமைச்சருடன் பேச்சு வார்த்தை
    
MTNL & BSNL பென்சனர் சங்க கூட்டமைப்பு (CBMPA) தலைவர்கள் M - K. பக்சி, S. S. நந்தா & கிசன் சிங் ஆகியோர் 11.06.2019 அன்று மத்திய கனரக தொழிற் மற்றும் பொதுத்துறை   நிறுவன அமைச்சர்  மாண்புமிகு அரவிந் கன்பத் வந்த் அவர்களை சந்தித்தனர். அமைச்சர் பொறுப்பேற்றதற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். BSNL, MTNL -ல் பென்சன் மாற்றம் குறித்து அவரிடம் விவாதித்து இக்கோரிக்கை மீது தீர்வு காண தனது உதவியை நல்கிட கோரினர்.பென்சன் மாற்றம் குறித்து பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை, அனுப்பிய கேள்வி மற்றும் ஆலோசனைகளுக்கு DOT - பதில் தர தயங்குவதை எடுத்துக் காட்டினர். அவற்றை பரிவுடன் கேட்ட அமைச்சர் இது விசயமாக தான்  தலையிட்டு உதவி செய்வதாக உறுதியளித்தார்.மேலும் இது சம்பந்தமாக, தேவைப்பட்டால் தொலை தொடர்பு அமைச்சரிடம் பேசுவதாகவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் BSNL & MTNL -ல்  நிலவும் சூழ்நிலைகளைக்கு ஒரு தீர்வு காணவும் அரசு மிகுந்த கவனத்தை செலுத்த உள்ளது என்றார்.
BSNL / MTNL - பென்சனர்களுக்காக தன் கதவு எப்போதும் திறந்திருக்கும் என்ற மனம் நிறைந்த பேச்சோடு கூட்டம் முடிந்தது.
( மத்திய சங்க செய்தி தமிழாக்கம்: . அன்பழகன், மாவட்டச் செயலர், புதுச்சேரி )
A Good Start in right direction will have a good END


No comments:

Post a Comment