Thursday 7 December 2017

அன்புள்ள தோழர்களே  / தோழியர்களே,
அனைவருக்கும் வணக்கம்.
2000க்கு முன்பாக ஒய்வு பெற்ற DOT தோழர்களின் ஓய்வூதியம் மாற்றத்திற்காக கடுமையான சுழலிலும் கூட சுமார் 60 மூத்த தோழர்களுக்கு ஓய்வூதியம் கணக்கீடு செய்யப்பட்டு DOT அலுவலகத்திலிருந்து Revised ஆர்டர் போடப்பட்டு ஓய்வூதியர்களுக்கு அவர்களின் கணக்கில் நிலுவைத் தொகை வருகிற மாதத்தில் பற்று வைக்கப்பட்டு, பென்ஷனிலும் கிடைக்க உத்தரவு வந்துள்ளது.
மறைந்த மூத்த தோழர் பாலசுப்ரமணியம் , தோழர் E.K. சுப்ரமணியம், தோழியர் K.S. சுப்புலக்ஷ்மி போன்ற மூத்தவர்களுக்கு உத்தரவு வரப்பெற்று வங்கியில் பணம் போடப்பட்டுள்ளது. இவர்களைத்தவிர சுமார் 40 மூத்த தோழர்களுக்கு போடப்பட்ட Revised ஆர்டர் copy AO /CBT  அவரவர்களுக்கு உரிய தனிப்பட்ட Copy ஓய்வூதியர்களுக்கும், வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மீதம் உள்ள அனைத்து eligible தோழர்களுக்கும் , application கொடுத்துள்ள   தோழர்களுக்கும் படிப்படியாக வந்து சேரும் . கணக்கு அதிகாரி திருமதி தேன்மொழி, சிவகாமசுந்தரி,மற்றும் திரு.சசிதரன் AAO போன்றவர்களின் பெரு முயற்ச்சியால் 6வது சம்பளக்கமிஷன் Pay revision  ஆர்டர் தகவல் பெறப்பட்டு கோவையில் உள்ள மூத்த தோழர்களின்  revision ஐ DOT க்கு அனுப்பியுள்ளனர். Dot cell -ம் இந்த Pay revision ஆர்டர் ஐ Sanction செய்து இருப்பது மன நிறைவைத் தருகிறது.
தோழர்களே நம்முடன் பணியாற்றி  DOT யிலிருந்து ஒய்வு பெற்ற தோழர்களுக்கு Pension revision வந்திருப்பது நம்சங்கத்தை நன்றியுடன் திரும்பிப் பார்க்க வைக்கிறது.நமது சங்கத்தின் இந்த சாதனை சங்க வேறுபாடு இல்லாமல் அனைத்து மூத்த தோழர்களையும் நம்முடன் இணைக்கும் என்பது உறுதி. இந்த செய்தியினைக் கேள்விப்பட்ட மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும்  மூத்த தோழர் கோபாலகிருஷ்ணன் SSS (O ) (ஒய்வு) அவர்களை மாவட்ட செயலர் சந்தித்த போது , நம் சங்க உறுப்பினராக விருப்பம் தெரிவித்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தரும்படி வேண்டியுள்ளார். நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்திற்கு கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.விடுபட்ட தோழர்கள் , விண்ணப்பம் கொடுக்காதவர்கள் ஆகியோர் நம்மை அணுகினால் சங்க வேறுபாடின்றி உதவ காத்திருக்கிறோம்.
09-12-17 ல் நடைபெறவுள்ள பென்ஷனர் தின கொண்டாட்ட நிழச்சியில் குன்னுர் தோழர்கள் , உறுப்பினர் அல்லாத அதிகாரிகள் , pension புத்தகம் வராத தோழர் சோமு ,ஏசுராஜன் ,ரமேஷ் தோழியர் மாதுரி போன்றவர்கள் நம் சங்க உறுப்பினர்களாக இணைய உள்ளனர். இந்த முயற்ச்சியில் ஈடுபட்ட நம் அனைத்து தோழர்களுக்கும் நன்றி .
மேலும் 09-12-17 பென்ஷனர் தின கொண்டாட்ட தினத்தை தமிழரின் பழமையான , பாரம்பரிய தொல் இசை நிகழ்ச்சியுடன் துவங்க இருக்கிறோம். சுவையான உணவு, இதமான உபசரிப்பு,கனிவான தகவல் பரிமாற்றம், புதியவர்களின் அறிமுகம் , ஓய்வூதியர்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்ளுதல், ஆலகாலப்பட்ட மாநில செயலர் தோழர் முத்தியாலு பேருரை போன்ற இனிய நிகழ்ச்சிகளுடன் நன்றாக நடைபெற AIBSNLPWA என்ற மஹா தேரை வடம் பிடிக்க வாருங்கள் வாருங்கள் என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.
நிகழ்ச்சிகள் சரியாக காலை 10-01 மணிக்கு துவங்கும். தோழர்கள் காலம் தாழ்த்தாமல் சரியான நேரத்திற்கு வருகை புரிய வேண்டுகிறோம்.
பணி ஒய்வு பெற்றுள்ள நாம் ஓய்வின்றி உழைத்து ஒளிமயமான எதிர்காலத்தை ஈன்றெடுப்போம் .




















No comments:

Post a Comment