Wednesday 7 June 2023

 

நெகிழ வைத்த தருணம்‌.....
 2 மாதங்களுக்கு முன் ஒரு ஓய்வூதியர் மேப்பிங் செய்திட விண்ணப்பம் செய்ய வந்தார். அதன் பிறகு தனது மகன் வசித்த ஊருக்கு சென்றார்‌. அங்கே அவருக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டு அவசர மருத்துவ சிகிச்சை  தேவைப்பட்டது. அங்கிருந்து நம்மிடம் ஆலோசனை கேட்டார். அதன்படி அவரது இணையர் கோவை வந்தார். முக்கிய அதிகாரியை சந்தித்து அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை கூறியவுடன் ஒரு மணி நேரத்தில் சரண்டர் சர்டிபிகேட் வழங்கப்பட்டது. உடனடியாக நமது ஓய்வூதியர்கள் சங்க அலுவலகத்துக்கு வந்தார். CGHSக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.
அடுத்த நாள் CGHS கார்டு பெற்று அந்த வெளி ஊருக்கு சென்று தனது இணையருக்கு CGHS Empanelled Hospitalலில் ஆபரேஷன் செய்யப்பட்டது.  அவர் உடல் நலம் தேறி நமது அலுவலகம்  வந்தபோது நாம் ஆச்சரியப்பட்டோம். நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுதான் CGHSன் மகிமை.




No comments:

Post a Comment