Sunday 28 June 2020


தோழர்அருணாச்சலம் மாநில உதவிச்செயலர் அவர்களின் பதிவு
அன்புள்ள தோழர்களே தோழியர்களே இன்று தமிழகம் மற்றும் இந்தியா வெங்கும் பெருகி வரும் குரானா தொற்று நோய பற்றி நீங்கள் அறிவீர்கள். தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு தனது மருத்துவ காப்பீட்டின் அடிப்படையில் கொரோனா டெஸ்ட் செய்ய அனுமதித்துள்ளது
 இதேபோல  நமது  பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கும் நமது MRS Card அடிப்படையில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நமது மாநிலச் செயலர் தோழர் RV, அகில இந்திய துணை தலைவர்  தோழர் DG,மற்றும்  அகில இந்திய பொதுச்செயலர் கங்காதர் ராவ்அவர்களுக்கு கடிதம்  வழியாகவும்   தொலைபேசி மூலமாகவும்   வேண்டுகோள் வைத்திருந்தேன். 
இதன் அடிப்படையில் நமது அகில இந்திய சங்கம் MRS Card அடிப்படையில்  கொரோனா  பரிசோதனை செய்ய  அனுமதிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்துள்ளது.நமது வேண்டுகோளை   ஏற்றுக்கொண்டு  முயற்சி எடுத்த அகில இந்திய சங்கம் மற்றும் மாநிலச் செயலர் RV மற்றும் தோழர் DG அவர்களுக்கு நமது நன்றியை உரித்தாக்குகிறேன்.
 அன்புடன்
 அருணாச்சலம் ,
மாநில உதவிச் செயலர்

No comments:

Post a Comment