Wednesday 18 December 2019


இன்று 17- 12- 19கோவை மாவட்டசங்கத்தின் சார்பாக பென்சனர் தினம் கொண்டாடப்பட்டது
தி உதயாஹாலில் நடந்தகூட்டத்திற்கு நமது மாவட்ட தலைவர் குருசாமி தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலர் தீருவேங்கடசாமி வரவேற்புரையாற்றினார். நமது மாநில நிர்வாகிகள் அருணாசலம் மற்றும் சி பழனிசாமி ,எஸ் எஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோர்பென்சனர் தினம் மற்றும் நமது மாவட்ட செயல்பாடுகள் பற்றி பேசினர். நமது மாநிலச் செயலர் தோழர் ஆர்வி  அவர்கள்நமது இன்றைய பென்சன் மாற்றம் மற்றும் அகில இந்திய மாநில சங்க செயல்பாடுகள் பற்றி விரிவாக பேசினார். கூட்டத்தில் பென்ஷன் மாறுதலுக்கு உச்சநீதிமன்றத்தை நாடும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் நமது மாவட்டத்தை சேர்ந்த 75 வயதை கடந்த 40 உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர். கூட்டத்தில் சுமார் 450 உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நமது மாவட்ட உதவிச் செயலர் ராமகிருஷ்ணன் கூட்டத்தை வழிநடத்தினார். நமது மாவட்ட உதவிச் செயலர்   கோட்டிப்பன் அவர்கள் நன்றி கூற சுவையான மதிய உணவுடன் மாநாடு நிறைவு பெற்றது. கூட்டத்தின் சில நிகழ்வுகளை இத்துடன் புகைப்படமாக பதிந்து இருக்கிறோம்.
                                 1004

2 comments:

  1. Congrats to the team of arrangements.well organized.
    Devarajan

    ReplyDelete
  2. 40 Pensioners above 75 years attended the meeting. Great!

    ReplyDelete