Monday 2 September 2019

அன்புத்தோழர்களே,
சமீபத்தில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பெய்த கன மழை காரணமாக எல்லா மாநிலங்களும் தண்ணீரில் மிதக்கக்கூடிய நிலை. அன்றாடம் வேலை செய்து வாழும் ஏழைத் தொழிலாளிகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் . முக்கியமாக ஆஸ்பத்திரிகளுக்குக்கூட போக முடியாத அவலம். 
துயரில் வாடும் மக்களின் கண்ணிரைத் துடைப்பது சமுதாயப்பணிகளில் ஈடுபட்டு வரும் நம் ஓய்வு ஊதியர்களின் தலையாய கடமையாகும். நம் அகில இந்திய சங்கமும் நிதி வசூல் செய்து நம் பிரதம அமைச்சரின் பேரிடர் நிதிக்கு அளிக்க எண்ணியுள்ளனர். இது குறித்த வேண்டுகோள் நம் பொது செயலர் மற்றும் அகில இந்திய தலைவர் ஆகியோர் விட்டுத்தள்ளதை இத்துடன் இணைத்துள்ளேன்.
நம் மாவட்ட ஓய்வூதியர்கள் தாராளமாக நிதி அளிக்க வேண்டுகிறேன்.நீங்கள் அளிக்க விரும்பும் தொகையை பணமாகவோ அல்லது செக் மூலமாகவோ நம் மாவட்ட பொருளாளர் தோழர் ஜெகதீஸ்வரன் அவர்களிடம் தாராளமாக வழங்க வேண்டுகிறேன். நம் அகில இந்திய தலைவர் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையை இத்துடன் இணைத்துள்ளேன்.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
R . திருவேங்கடசாமி ,
மாவட்ட செயலர் ,
AIBSNLPWA 

No comments:

Post a Comment