Saturday 26 March 2022

 

25-03-2022 அன்று நமது மாவட்ட செயற்குழு நமது மத்திய தொலைபேசி நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை ஹாலில் சிறப்பாக நடைபெற்றது மாவட்ட தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் தோழர்  ஆர் டி அனைவரையும் வரவேற்று இன்றைய பிரச்சனைகள் பற்றி  எடுத்துரைத்தார்பல்வேறு சூழல் எதிர்பார்ப்புக்கு இடையே சுமார் 170 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது ஒரு மாவட்ட மாநாடு போல் நடைபெற்றது.   தோழர்  அருணாசலம், மாநில உதவிச் செயலர் தோழர் சிபி மாநில உதவித் தலைவர்,    குன்னூர் மாவட்ட செயலர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் .

துளசிதரன் பெரியநாயக்கன்பாளையம் அவர்கள் சமீபத்தில் நமது அகில இந்திய தலைவர்கள் டெல்லியில் கலந்துகொண்டு அனைவரையும்   சந்தித்தது  அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற முன்னேற்றங்கள்  நமது பிரச்சனைகளின் நிலைமை பற்றி பேசியது தமிழில் சிறப்பாக விவரித்தார்.

  மாநிலச் செயலாளர் கலந்து கொண்டு இன்று இருக்கக்கூடிய பிரச்சனைகளான Pension Revision, Pay anomaly , Extra increment case  பிரச்சனையில் நாம் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றது , Pension Revision  பிரச்சனையில் நம் இன்றைய நிலை அதை எப்படி வெற்றி கொள்ள போகிறோம் , CGHIS.  இன்றைய நிலை பற்றி விபரமாக அனைவருக்கும் புரியும்படி விளக்கமாக பேசினார்பின் நமது உறுப்பினர்கள் சொசைட்டி பிரச்சனை பே ரிவிஷன் மற்றும் பல பிரச்சனைகளில் கேட்ட சந்தேகங்களுக்கும்  விளக்கமளித்தார்

சிறப்பான மதிய உணவுக்கு பிறகு கூட்டம் இனிதே முடிவுற்றது . கூட்டம் சிறப்பாக நடைபெற்றது நமது முன்னணி ஊழியர்கள் முன்னணி தோழர்கள் ஜெகதீஸ்வரன் , மோகன்  சந்திரசேகரன்,   ராபர்ட் , சந்திரன் , வாசு  ,Kottiappan,  அருணாசலம் மற்றும் பலர்   பெரிதும்  முயற்சி எடுத்தனர் . சில புகைப்படங்களை இத்துடன்  இணைக்கப்பட்டுள்ளது .








Friday 25 March 2022

 


Procedure for implementation of change of option by a Pensioner/Family Pensioner from FMA to CGHS (OPD) facility and vice-versa:

CLICK HERE TO SEE THE ORDER

Wednesday 23 March 2022

 

வணக்கம்.
 ஏற்கனவே அறிவித்தபடி  கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்,
மத்திய தந்தி அலுவலகத்திற்குப் பதில் அண்ணாமலை ஹோட்டலில் 
25-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 1015 மணிக்கு நடைபெறும். இதில் நமது மாநிலச் செயலர்தோழர் R .வெங்கடாசலம்   அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். செயற்குழு உறுப்பினர் அல்லாத தோழர்களும் பொள்ளாச்சி உடுமலை திருப்பூர் மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை தோழர்கள் கலந்து கொள்ளலாம். மற்ற முக்கிய முடிவுகள் நேரில்.
தோழமை வாழ்த்துக்களுடன்
R . திருவேங்கடசாமி ,
மாவட்ட செயலர்
AIBSNLPWA
கோவை மாவட்டம்


Tuesday 8 March 2022

 










 

Non-CGHS பகுதியில் இருக்கும் நமது  ஓய்வுதியர்கள் அனைவருக்கும் FMA ரூபாய் 1000 தருவதற்கு உத்திரவு இன்னும் ஓர் இரு நாளில் வெளிவரும் சூழ்நிலையில் அது ரூபாய் 3000 ஆக உயர்த்த பென்ஷன் இலாகா முன் வந்து இருப்பது மகிழ்ச்சியான செய்தி.



Thursday 3 March 2022

 

A  Copy Of Court Order On Extra Increment Case has been posted here. A Link is given below. By clicking the Link with your mouse pointer, the order copy could be viewed.

CLICK THIS LINK WITH YOUR MOUSE POINTER TO SEE THE ORDER