Thursday 26 October 2017

AIBSNLPWA  Coimbatore Division Branch wishes all Retirees a Happy, Healthy and Peaceful retired Life.

Tuesday 24 October 2017

PREPARATION FOR THE PURI CONFERENCE
ODISHA CIRCLE UNIT HELD A SPECIAL CIRCLE CONFERENCE ON 22-10-2017 IN PURI, THE TEMPLE CITY WHERE WE ARE GOING TO MEET IN OUR NEXT ALL INDIA CONFERENCE.
Leaders of Odisha circle met in Puri to hold preliminary discussion on arrangements to be made by the host circle.
                            A view of the comrades attending the special meeting:


Tuesday 17 October 2017


அன்புநிறை தோழர்களே/தோழியர்களே ,
வணக்கம்.
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்களை மாவட்ட சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஆண்டு பணியில் உள்ளோருக்கு குறைந்த பட்ச போனஸ் கிடைக்கும் என்று பெரிதாக நம்பினோம் .விடிந்தால் தீபாவளி ஆனால் தித்திக்கும் தீபாவளி பரிசாக போனஸ் அறிவிப்பு இன்னமும் வராத நிலை குறித்து கவலை கொள்கிறோம். சுமார் 80 நாட்களுக்கு மேல் போனஸ் தொகை பெற்று மகிழ்ந்தவர்கள்  நாம்.முதன் முதலாக பொதுத் துறையில் போனஸ் பெற்று மகிழ்ந்தோம் நாம். ஆயுத பூஜைக்கு முன் போனஸ் என்பது நம் இரத்தத்தில் ஊறிய வரலாறு . ஏனோ அரசின் பிடிவாத போக்கினால் போனஸ் நமக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இது மிக ஆழமான பாசத்துடன் கூடிய சோகம். எரிசாம்பலில் இருந்து விழித்தெழும் அக்கினி குஞ்சுகள் போல நம்முடைய தொழிற்சங்கங்கள் ஒன்று பட்டு இந்த போனஸை பெற்றாக  வேண்டும்..இதற்கான சங்க அமைப்பும் , வரலாறும் , தலைமையும் நம்மிடம் உண்டு.பெறப்போகிற இந்த போனஸ்தான் நாளைய நம் சம்பள மாற்றத்திற்கு அஸ்திவாரமாக இருக்கும்.
அன்புள்ள ஓய்வூதியர்களே , மாற்று சங்கத்தில் இருந்தாலும் கூட ஓய்வூதியர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் ஒன்றுபட்ட வேண்டும். 2000 க்கு முன்பாக ஒய்வு பெற்றுள்ள சுமார் 60 DOT ஓய்வூதியர்களுக்கு, ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று தேவையான ஆவணங்களை அவர்களிடம் இருந்து பெற்று இலாகாவிடம் நம் மாவட்ட செயலர், மாவட்ட பொருளாளர் , மாநில உதவி தலைவர் மற்றும் மாநில துணை செயலர் ஆகியோர் சேர்த்துள்ளனர். பல ஓய்வூதியர்கள் ஆவணங்களில் Last Pay Drawn தகவல் இல்லை.அப்படிப்பட்ட தோழர்கள் தங்களிடம் உள்ள file களில் தேடி எடுத்து சேர்ப்பிக்க வேண்டும்.குறிப்பாக தோழர்கள் ஜாய் மானிட்டர் ,வெங்கடாசலம் JTO , வெங்கிடுசாமி , E.K. சுப்ரமணியம் அம்மணி அம்மாள் மறைந்த கந்தசாமி (MP ) பொள்ளாச்சி சந்திரா சிதம்பரம், ஆகியவர்களின் ஆவணங்கள் பெறப்பட்ட வேண்டும்.
இன்னும் நம் தோழர்களுக்கு தெரிந்த , விடுபட்டுப்போன DOT ஓய்வூதியர்கள் எவரேனும் கோவை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் இருந்தால் , நம் தோழர்கள் அவர்களை அணுகி பெற்றுத்தர வேண்டுகிறோம்.
மெடிக்கல் அலவன்ஸ் விஷயமாக CAO விடம் விசாரித்த வகையில் சுமார் 1000 பேர்களுக்கு வழங்கிட ஒப்புமைக்காக அனுப்ப பட்டுள்ளது.ஆனால் சென்னை STR , நெல்லை STR , சென்னை தொலைபேசி மாவட்டம் போன்ற பகுதிகளில் ஒரு சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு தவணைகளையும் ஒன்றாக பெற மாநில சங்கம் முயற்சிகள் எடுத்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மருத்துவ பில்கள் சுமார் 12 பேர்களுக்கு Sanction ஆகி உள்ளது. Vendor Code ல் பதிவு செய்வதில் சிறு சிக்கல் Software பகுதியில் இருப்பதால் நிர்வாகம் அதனை சரி செய்வதில் முனைந்துள்ளது.
78.2% நிலுவைத்தொகை வழங்கப்படா நிலை குறித்து   கனரா வங்கி , கார்பொரேஷன் வங்கி தலைமை அலுவலகங்களுக்கு கடிதங்கள் எழுதி உள்ளோம் மேலும் தல மட்ட அதிகாரிகளுடன் பேசி CPPC க்கும் தகவல் அனுப்பப் பட்டுள்ளது.தோழர்கள் பொள்ளாச்சி பத்மா,சந்திராமுருகன், ருக்மணி,பெரியநாயக்கன் பாளையம் வெங்கடராமன் , ஈஸ்வரன் (IOB ) ஆகியவர்களுக்கு மீண்டும் பேசி பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.விடு பட்டுப்போன 78.2% Revision Order கோவை AO அலுவலகத்தில் உள்ளது. கிடைக்கப்பெறாதவர்களின் பெயர்களைக் சொல்லி நிர்வாகத்திடம் இருந்து Revised Order பெற முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
தோழர்களே நம் கோவை பகுதியில் சுமார் 300 க்கு மேற்பட்ட தோழர்கள் நிலுவைத்தொகை பெற்றுவிட்டனர். ஆனால் சுமார் 130 தோழர்கள் மட்டுமே நன்கொடை வழங்கி உள்ளனர்.இன்னும் , இன்னும் எதிர்பார்க்கிறோம் தோழர்களே .இது கோவை மாவட்டத்திற்கு அல்ல .பரந்து பட்ட அனைத்து bsnl ஓய்வூதியர்கள் அனைவரும் மிக்க ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் Pay Anomaly , 78.2% நிலுவை 01-01-2007 லிருந்து பெற ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் நம் பென்ஷன் மாற்றம் ஆகியவைகளை நாம் பெற , நீதிமன்ற செலவுகள் பல லட்சங்களைத் தாண்டும். இந்த அசுவமேத யாகத்திற்கு நம்முடைய பங்களிப்பு மிகவும் அவசியமானதொன்று.நன்கொடை கேட்டபோதெல்லாம் வாரிக் கொடுத்த ஓய்வூதியர்கள் நாம். கூட்டத்தை சிறப்பாக அறுசுவை உணவுடன் நடத்துவதும் நாம்தான். கேட்காமலேயே நன்கொடை வழங்கிய தோழர்கள் சங்கரன் ரூ 5000/-, ஜெயபால் ரூ 2000/-, சந்திர வள்ளி ரூ 2000/-, அருணாசலம் ரூ 2000/- B அருணாசலம் ரூ 2000/- இவர்களை பின்பற்றி அனைவரும் பங்களிக்கும்படி அனைவரையும் இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறோம்.
DOT Retirees 4 பேர்கள் தோழர்கள் வெங்கிடுசாமி, சிதம்பரம், சிகாமணி , E.K. சுப்ரமணியன் ஆகியோர் விரைவில் ஆயுட்கால உறுப்பினர்களாக இணைய ஒத்துக்கொண்டுள்ளனர். 
முக்கிய செய்தி :  அனைத்திந்திய மாநாடு 2019 ஏப்ரல் மாதம் புவனேஸ்வரில் நடக்க இருக்கிறது. அதில் கோவை மாவட்ட பகுதியில் இருந்து பெருவாரியான தோழர்கள்/தோழியர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு வந்தவுடன் நாம் பெருவாரியாக கலந்து கொள்ளலாம்.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட உதவி செயலர் தோழர் சிவக்குமார் முன்கை எடுப்பார்.
தோழர்களே நம் மாவட்ட செயற்குழு தோழர் குருசாமி அவர்கள் தலைமையில் 12-10-2017 அன்று கூடியது. 15 தோழர்கள் கலந்து கொண்டனர்.அதில் மாவட்ட செய்திகள், மாநில சங்க செயல்பாடுகள், மருத்துவ பில்கள்,நிதி நிலைமை, சிறப்பு ஓய்வூதியர் மாநாடு நடத்துவது சம்பந்தமாக பேசப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காலையில் நடை பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 9 தோழர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புலவர் கோவிந்தன் ரூ 1000/- கமலா பாலசுப்ரமணியன் ரூ 1000/-, பொள்ளாச்சி சம்பத் லட்சுமி ரூ 1000/-, பால் ராஜ் ரூ 1000/-, விஜயலட்சுமி ரூ 1000/- வழங்கினர் . 6 புதிய உறுப்பினர்கள் ஆயுட்கால உறுப்பினர்களாக இணைந்தனர். இவர்கள் அனைவரிடமும் இருந்து விண்ணப்ப படிவம், சந்தா மற்றும் நன்கொடை ஆகியவைகளை பெற்றுத்தந்த பொள்ளாச்சி பால் மாணிக்கம் அவர்களுக்கு நம் பாராட்டுக்கள் மற்றும் நன்றி.
மீண்டும் அனைவருக்கும் எம் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்.
இவண்
பி .அருணாசலம்.
மாவட்ட செயலர்,
AIBSNLPWA கோவை மாவட்டம். 
Sri. N Gurusamy, 2003 retiree has enrolled as new life member in our association today. Smt. Suseela and Kuppathal have donated  their 78.2 arrears contribution.
         Com. Paul Manickam is being Honoured with Ponnadai by President
                      Com.Sankaran DGM  Fin(R) Donates Rs 5000/-






















































































Saturday 14 October 2017

The letter from
 DoT to SNEA 
on the loss incurred by 
BSNL and possibility 
of getting 
pay revision 
as per
 Third PRC 
is attached
 herewith

Friday 13 October 2017

Extra Increment Case
On the basis of our court case PCCA, TN
 has issued a speaking order and
 sent to our Circle Secretary.
It's clear that
there shall not be any recovery
 and no reduction in pension.
With regard to
granting of 78.2%
 benefit with extra increment
 to the left out cases
will be decided soon,
 in consultation with DoT.
 Thus!  Only Our Association has taken
 the necessary correct steps
 to check the authority.
 This is our achievement.
K.Muthiyalu, CS

Tuesday 10 October 2017

Com.Lakshmanan enrolled as Life Member
                                        Shri.  Natchimuthu and his wife VN Muthu have
                                        enrolled as new life member in our association.

Monday 9 October 2017

                                                             2
அன்புத் தோழர்களே, அருமைத் தோழியர்களே ,
அனைவருக்கும் தோழமை வணக்கம். தீபாவளி திருநாள் வேலைகளில் ஈடுபட்டு வரும் உங்களை மீண்டும் சந்திப்பதில் பேருவகை கொள்கிறேன்.
08-10-2017 நேற்று மாலை 7 மணியளவில் பொள்ளாச்சி தோழர் பால் மாணிக்கம் அவர்களின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலர்,மாநில உதவி செயலர் ஆகியோர் பொள்ளாச்சி சென்றோம் . பொள்ளாச்சி தொலைபேசியக மனமகிழ் மன்றத்தில் ஓய்வூதியர்கள் ஒன்று கூடினோம். கலந்து கொண்ட 25 பேர்களில் மூத்த தோழர் தண்டபாணி, தோழியர் சுசீலா சம்பூரணம் ஆகியோரும் அடங்குவர்.

மாவட்ட செயலர் சுமார் 1 மணி நேரம் 78.2% நிலுவைத்தொகை 2007 முதல் நமக்கு கிடைக்க வேண்டியது குறித்தும்,மெடிக்கல் அலவன்ஸ் கோவையில் தாமதமாவது குறித்தும் Extra Increment னால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குறித்தும்,Anomaly Case பற்றி சமீபத்தில் வந்துள்ள உத்தரவு பற்றியும் DOT இலாகாவே Pension வழங்குவதற்கு ஏதுவாக கேட்கப்பட்டுள்ள தகவல்களை ஒன்றிணைப்பது குறித்தும் மிக விரிவாக தெளிவாக பேசினார்.2000க்கு முன்பாக ஒய்வு பெற்றுள்ள ஓய்வூதியர்களுக்கு 50% ஓய்வூதியம் பெற கொடுக்கப்பட வேண்டிய விண்ணப்பத்தைப்பற்றியும் பேசினார்.
Medical Bill குறித்தும், மெடிக்கல் அலவன்ஸ் குறித்தும் Extra Increment குறித்தும் உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு உரிய முறையில் பதிலளிக்கப்பட்டது  தோழியர் பத்மா கனரா வங்கி மூலமாக ஓய்வூதியம் பெறுகிறார்  நிலுவைத்தொகை குறைவாக பெற்றதாக கூறினார். தோழியர் சம்பத் லட்சுமி ஓய்வூதியத்தில் வருமான வரை பிடித்தம் குறித்தும் பதில் அளிக்கப்பட்டது.
தோழர்களே செழுமையும் பெருமையும் வாய்ந்த பொள்ளாச்சியில் 68 போராட்டத்தில் கலந்து கொண்ட மூத்த தோழர்கள் 22 பேர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு பின்னர் அகில இந்திய சங்கத்தால் பிரச்சினை  தீர்க்கப்பட்டு  மீண்டும் பணியில் அமர்ந்த தொழிற்சங்க வரலாறு கொண்ட ஊர் பொள்ளாச்சி.நீண்ட நாட்கள் பொள்ளாச்சியில் பணியாற்றிய மாவட்ட செயலர் தோழர் அருணாசலம், பால் மாணிக்கம் தோழியர் விஜயலட்சுமி ,தோழர் R .திருவேங்கடசாமி.ஆகியோர் மிக அருமையாக உரையாற்றியதன் பலனாக மிக்க எழுச்சியுடன் 7 தோழர்கள் தம்மை ஆயுட்கால உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.மூத்த தோழியர்கள் சம்பத் லட்சுமி , சுசிலா சம்பூர்ணம் பத்மா , பத்மா சுந்தரம்  தோழர்கள் ராகவன் ,சசிகுமார் போன்றவர்கள் புதிய ஆயுட்கால உறுப்பினர்களாக நம் சங்கத்தில் சேர்ந்தனர். புதிய உறுப்பினர்கள் அனைவரையும் வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.
தோழியர்கள் விஜயலட்சுமி, சம்பத் லட்சுமி தோழர்கள் பால்ராஜ் ஆகியோர் 78.2% நிலுவை பெற்றமைக்காக நன்கொடை அளித்தனர்.

இவ்வாறாக கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கோவையில் தோழியர் சந்திரவள்ளி ஜெகதீசன்  அவர்கள் ரூ 2000/- நன்கொடை தொகையினை தோழர் சிவக்குமாரிடம் அளித்துள்ளார்கள். அம்மட்டோ FNTO மூத்த தோழர் A.Y  .வெங்கடேஸ்வரன் ஆயுட்கால உறுப்பினராக இணைந்துள்ளார்.
தோழியர் சந்திரவள்ளி ஜெகதீசன் நன்கொடை அளித்தார் 


தோழர் ஜனார்தனன்  நன்கொடை வழங்கினார் 
பொள்ளாச்சியில் 2000க்கு முன்பாக ஒய்வு பெற்றஅறையும்  தோழர் வேங்கடசாமி மறைந்த தோழர்கள் கந்தசாமி ( முன்னாள் MP ), சிதம்பரம் , CK  சுப்ரமணியம் , மறைந்த தோழர் U N சுப்ரமணியம் ஆகியோர்களின் இல்லங்களுக்கு சென்று Pension Revision Form கொடுத்து அவர்களுக்கும் நிலுவைத்தொகை நிச்சயம் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தையும் அளித்து , அவர்கள் மன மகிழ்ச்சியுடன் நம் உறுப்பினர்களாக இணைவோம் என்ற உத்தரவாதத்துடன் பொள்ளாச்சி கூட்டம் இனிதாக முடிவடைந்தது.
உடுமலையில் 42 தோழர்கள், பொள்ளாச்சியில் 25 தோழர்கள் , ஆனைமலையில் 3, வால்பாறையில் 4 பல்லடத்தில் 3 தோழர்கள் உள்ளடக்கிய பகுதிகளுக்கு தொடர்புபடுத்தி சங்க செய்திகளை அவர்களுக்கு கொண்டுசேர்க்கவும் அவர்களின் பிரச்சினைகளை மாவட்ட சங்கத்திற்கு தெரியப்படுத்தவும் தோழர் பால்மாணிக்கம் ஒருங்கிணைப்பாளராக சங்கப்பணியாற்ற தானே முன் வந்துள்ளார் . அவரை பாராட்டுகிறோம். மேலும் மாவட்ட செயலாளர் மாதம் ஒருமுறை பொள்ளாச்சி பகுதியில் உள்ள நம் சங்கம் சேர்ந்த சேராத ஓய்வூதியர்களை அணுகி அவர்தம் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்.
பொள்ளாச்சி அலுவலகத்தில் நம் சங்க கூட்டம் நடத்த அனுமதி வேண்டி தோழர் RT சென்றபோது பொள்ளாச்சி கோட்டப்பொறியாளர் திரு.நாகராஜன் அவர்கள் "" நீங்கள் தான் ஓய்வூதியர் அமைப்பிற்கு தூணாக இருந்து செயல்படுகிறீர்கள்.உங்களுக்கு அனுமதியை எப்படி மறுக்க முடியும்""  என்று மன நெகிழ்வுடன் கூறியது மனதுக்கு மகிழ்வளிப்பதாக இருந்தது.
தோழர்களே பொள்ளாச்சி ,திருப்பூர் ,பல்லடம், வால்பாறை போன்ற பகுதி ஓய்வூதியர்களுடன் பேசியபோது கனரா வங்கி , கார்பொரேஷன் வங்கி , பேங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் மூலம் 78.2% நிலுவைத்தொகை சரியாக வழங்கப்படவில்லை. விவரங்களைப்பெற பெங்களூர் , நாக்பூர்  நகர்களில் உள்ள CPPC களை தொடர்பு கொண்டால் சரியான விளக்கம் கொடுப்பதில்லை.உதாரணத்திற்கு பொள்ளாச்சி தோழியர் பத்மா அவர்களுக்கு  6 மாதம் ஆகியும் நிலுவைத்தொகை கிடைக்கப்பெறாமல் சென்ற வாரம் வந்தது.அந்த fixation -ல் அவர் வாங்கிக்கொண்டிருந்த பென்சனில் ரூ.1100/- கணக்கில் குறைத்து வரவு வைக்கப்பட்டுள்ளது. பெரிய நாயக்கன் பாளையம் மூத்த தோழர் வெங்கடராமன் அவர்களுக்கு Order வந்து 6 மாதமாகியும் நிலுவைத்தொகை கிடைக்க வில்லை.இந்த பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். இவற்றை பென்ஷன் அதாலத்தில் முறைப்படுத்த வேண்டியது நம் கடமையாகும். நாளைக்கு பென்ஷன் Revision வந்தால் இந்த குளறுபடிகள் இன்னமும் அதிகமாகும்.எனவே நாம் மாதமொருமுறை பிரச்சினைகள் உள்ள பென்ஷன்தாரர்களை சங்க அலுவலகம் வரவழைத்து விவாதித்து நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் விடாமல் போராடி வெற்றிக்கனியை பெற்றுத்தரும் நம் சங்கத்திற்கு கட்சி, அரசியல் ,Cadre , வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து மக்களையும் ஒரு அணியில் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமாகும். ஓய்வூதியர்கள் எண்ணிக்கை கூடுவதால்  , பணியில் இருப்போர்களின் சங்கத்தை விட கவனமாகவும் , பொறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் பணியாற்ற வயதான இளைஞர்களான  நாம்  காலம் இட்ட கட்டளையாக எண்ணி உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வாழ்க ஓய்வூதியர் ஒற்றுமை!                                   வளர்க AIBSNLPWA !!
தோழமை வாழ்த்துக்களுடன் 
பி அருணாசலம். 
மாவட்ட செயலர் .
பொள்ளாச்சியில் நடைபெற்ற ஓய்வூதியர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் 







Friday 6 October 2017

Yesterday, BSNL staff Unions have organized a candle march in Delhi demanding wage re vision. We congratulate them for the united action. We know candle cannot substitute sun. But it is better to light a candle than to curse the darkness.
A sustained, united struggle is the essential pre-requisite to get wage revision. Some have the illusion that CMD and BSNL Board will help them. Attitude of the government is most important.
We have no illusion that once the serving staff get the wage revision the pensioners will automatically will get pension revision. Pensioners have to struggle for that. Our pension revision should be completely delinked from the wage revision issue of serving staff.
However, we are keen that serving staff get wage revision. They lost bonus. Normally Telecom employees used to get maximum bonus. More than the railway workers. Had we continued as Department of Telecom, minimum 80 days’ pay could be expected as bonus for each serving employee. That comes around Rs 18000. BSNL management has saved more than Rs 350 crore. Navrathri and Durga Puja have gone without bonus for BSNL staff.That is another indication. United struggle by entire BSNL employees including officers will become inevitable for wage revision.
The Corporate Office of BSNL has sent another letter today to all CGMs asking to intimate number of cases processed by BSNL and forwarded to concerned CCAs for revision of DoT pension applying the new formulation granted vide order dated 12-5-2017.This is the third reminder in the matter.Number of cases identified against each circle is also attached to the letter from Corporate Office.The number of DOT pensioners in the Circles is as:

ANDAMAN & NICOBAR 2

ANDHRA: 5602

ASSAM:823

BIHAR: 2350

CHHATISGARH: 534

DELHI: 13000

GUJARAT: 3655

HARYANA: 850

HIMACHAL: 354

J & K: 525

JHARKHAND: 383

KARNATAKA: 5955

KERALA: 4407

KOLKATA TD: 4631

MADHYAPRADESH: 3213

MAHARASTRA: 21500

NE I: 411

ODISHA: 1482

PANJAB: 2699

RAJASTHAN: 2506

TAMILNADU: 11400

UP EAST: 3900

UP WEST: 1586

UTTARAKHAND: 455

WEST BENGAL: 6863

TOTAL: 99084


Courtesy: CHQ Web

Wednesday 4 October 2017

அருமைத் தோழர்களே / தோழியர்களே ,
அனைவருக்கும் தோழமை வணக்கம்.
தமிழ் மாநில சங்கத்தின் வேண்டுகோளின் பிரகாரம் ஆதார் xerox -ல் உங்கள் PPO எண் , உங்கள் கைப்பேசி எண் ,PAN எண் ஆகியவற்றை தெளிவாக எழுதி self attested என கீழே எழுதி கையொப்பமிட்ட copy யை மாவட்ட சங்க அலுவலகத்தில் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சென்னையில் உள்ள STR மாவட்ட கிளை அதன் உறுப்பினர்கள் அத்துணை பேர்களின் விவரங்களை DOT cell க்கு கொடுத்து விட்டார்கள்.நாமும் அவ்வாறே மிக விரைவாக கொடுக்க வேண்டும்.இதுவரை நம் மாவட்டத்தில் சுமார் 150 தோழர்கள் மேற்கூறியுள்ள விவரங்களை மாவட்ட சங்கத்திடம் கொடுத்துள்ளார்கள். மற்ற தோழர்களும் விரைவில் அளிக்கும்படியாக கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
2000க்கு முன்பாக ஒய்வு பெற்ற DOT ஓய்வூதியதாரர்களுக்கு அவர்கள் பெற்றுவந்த கடைசி மாத சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்பட உள்ளது.அதற்கான விண்ணப்ப படிவம் BSNL அலுவலகத்தில், AO அலுவலகத்தில் மற்றும் நம் சங்க அலுவலகத்திலும் உள்ளது. அதனைப்பெற்று பூர்த்தி செய்து அற்ரிய நகல்களுடன் அலுவலகத்தில் வழங்கிட வேண்டுகிறேன்.ஓய்வூதிய அடிப்படை ஊதியத்தை குறிக்க கடைசி பத்து மாத சம்பள சராசரி க்குப்பதிலாக ( LPD )கடைசி மாத சம்பளத்தை மட்டும் (Basic Pay ) எடுத்துக்கொள்வதால் , கணிசமான அளவிற்கு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். எனவே இந்த வேலையினை விரைவாக , மிக விரைவாக முடிக்க வேண்டுகிறேன்.
இதுவரை சுமார் 20--25 மூத்த DOT ஓய்வூதியர்கள் வீடுகளுக்கே சென்று விஷயத்தை எடுத்துக்கூறி ,உரிய படிவங்களை கொடுத்து பூர்த்தி செய்யச் செய்து .அவற்றை நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளோம்.இந்த அரிய கண் துஞ்சா , மெய்வலி  பாரா சேவையை கோவை மாவட்டம் மட்டுமே செய்து வருகிறது என்பதை மகிழ்வுடன் உங்களுடன் பரிமாறிக்கொள்கிறேன். இவ்வரிய சேவையில் தம்மை என்னுடன் இணைத்துக்கொண்ட தோழர்கள் திருவேங்கடசாமி, சிவக்குமார் , ஜெகதீசன் , அன்புரோஸ் ஆகியவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .உதாரணத்திற்கு தோழியர் சுந்தரி என்ற Retired Trunk Monitor  அவர்களுக்கு வயது 82, அவர் கணவருக்கு வயது 90.அவர்களின் 1001 சந்தேகங்களை நிவர்த்தி செய்துள்ளோம். முதலில் நம் சங்கத்தின் மீது நம்பிக்கை வரச்செய்து, 2 , 3 நாட்கள் தொடர்ந்து அவர்கள் இல்லம் சென்று விவரங்களை எடுத்துக்கூறி அவர்களிடம் அந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பெற்றதை இங்கே குறிப்பிடலாம்.
தோழர்களே இதைப்போல DOT ஓய்வூதியர்கள் சுமார் 100 பேர்களுக்கு மேல் இருக்கலாம். அவர்களையும் சென்று பார்த்து அல்லது தகவல் கொடுத்து வரச்செய்து இந்த காரியத்தை முடிக்க வேண்டும். அவர்கள் யாரும் நம் உறுப்பினர்கள் அல்ல.ஆனால் அதற்குப்பிறகு நம் ஆயுள்கால சந்தாதாரராக ஆகி நன்கொடையும் வழங்கியுள்ளார்கள் என்பது மனதிற்கு மகிழ்வினை அளிக்கிறது.
தோழர்களே 78.2 சத நிலுவை  த்தொகையினை அநேகமாக எல்லோரும் பெற்று விட்டார்கள். ஒவ்வொருவரும் சுமார் 50,000/-,  60,000/- அதற்கு மேலும் பெற்றுள்ளது மகிழ்வினை அளிக்கிறது. நமக்குத்தெரிந்து சுமார் 20 தோழர்களுக்கு மட்டுமே நிலுவைத் தொகை கிட்ட வில்லை. தமிழகத்தைத் தாண்டி தங்கள் மத்திய அலுவலத்தைக் கொண்டுள்ள கனரா வாங்கி, பேங்க் ஆப் இந்தியா , சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ,கார்பொரேஷன் வங்கி ஆகிய வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த சிக்கல். அந்தந்த மத்திய அலுவலகங்களுக்கு தகவல்களை மற்றும் இ- மெயில்களை  நாம் அனுப்பியுள்ளோம். விரைவில் சிக்கல் தீருமென்று  நம்புகிறோம். இதைத்தவிர வேறு ஏதாவது பிரச்சினை காரணமாக நிலுவைத்தொகை பெறாத தோழர்கள் உரிய காரணங்களுடன் மாவட்ட சங்கத்தை அணுகலாம். சேவை புரிய காத்திருக்கிறோம். சென்னையில் இயங்கி வரும் DOT அலுவலகம் நம் மனதிற்கு ஏற்றவாறு உதவிகரமாக இல்லை.அங்குள்ள வேலைப்பளு, ஆள்கள் பற்றாக்குறை , மற்ற பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் நம் தமிழ மாநில சங்கம் நமக்கு மிகுந்த உதவிகள் புரிந்து வருகிறது.
தோழர்களே 78.2 சத நிலுவை பெற்றவர்களில் சுமார் 150 தோழர்கள் மட்டுமே நன்கொடை அளித்துள்ளனர். சுமார் 200 பேர்களுக்கு மேல் இன்னும் வழங்க வேண்டும். நமது செயற்குழு உறுப்பினர்கள் முயற்சி செய்து நன்கொடை அளிக்க ஊக்கப்படுத்த  வேண்டும். பென்ஷன் அனாமலி , 01-01-2007 லிருந்து ஓய்வூதிய மாற்றம் 78.2 சத அடிப்படையில், மற்றும் ஓய்வூதிய மாற்றம் பெற கவனம் செலுத்த வேண்டும். கோர்ட்களில் தொடுத்துள்ள வழக்குகளை  சந்திக்க பெருந்தொகை தேவைப்படுகிறது. இதனை உணர்ந்து நன்கொடைகளை அள்ளி வழங்க வேண்டுகிறோம்.
வரும் 12-10-2017 வியாழன் நம் மாவட்ட செயற்குழு நம் சங்க அலுவலகத்தில் கூட உள்ளது. இந்த மாதம் பிறந்தவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் , நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் , மெடிக்கல் அலவன்ஸ் போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
மீண்டும் சந்திப்போம்.
தோழமை வாழ்த்துக்களுடன் 
B .அருணாசலம் 
மாவட்ட செயலர்.