Saturday 3 December 2022

 

கொங்கு மண்டல திருமகன் 
கொள்கை பிடிப்பில் பெருமகன் 
சங்கம் கண்ட தலைமகன் 
தகை சான்ற பதவி பெற்று, 
ஓய்வூதியர் அகம் மலர 
ஓய்வறியா தொண்டு புரிந்து 
பல்லாண்டு வாழ்க ! வாழ்கவே!!

 


 

இன்று முடிவைந்துள்ள நம் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் நம் கோவை மாவட்ட சங்கத்தை சார்ந்த தோழர் B . அருணாசலம்  அகில இந்திய கொள்கை பரப்பு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

                             அவர் பணி சிறக்க பாராட்டுக்கள் 


Monday 28 November 2022

அருமை  கோவை மாவட்ட ஓய்வு ஊதிய  நண்பர்களே,
இனிய செய்தி .30-ஆம் தேதி மதியம் 11 மணிக்கு கோவையிலிருந்து 26   சார்பாளர்கள் அகில இந்திய மாநாட்டிற்கு விசாகப்பட்டினம் செல்ல  இருக்கிறோம் . அவர்களுக்கான சார்பாளர்  கட்டணம்  மாவட்ட சங்கத்தின் சார்பாக  கட்டப்பட்டுள்ளது. இரண்டு பெண்கள் உட்பட நம்முடைய   சார்பாளர்கள்  வெற்றியுடன் சென்று  திரும்ப  வேண்டும்.  மேலும் இந்த அகில இந்திய மாநாடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு. நம்முடைய பென்ஷன் ரிவிஷன் , பல மட்டங்களில் பேசி சாதகமான நிலையை DOT  அதிகாரிகளும், மெம்பர் சர்வீஸ் அவர்களும் நம்மிடம் விவாதித்த அளவில் மிகவும் அனுசரணையாக  இருந்தனர்
ஆனால் DOT  இன்று திடீரென்று அதிகாரத்தினுடைய சூழ்ச்சியினால் அது கை கூடாமல்  போகக்கூடிய நிலை இருந்தது .   இதனை  கருத்தில் கொண்டு  நம்முடைய சங்கம் இந்த பென்ஷன் ரிவிஷனை  கோர்ட் மூலமாக தீர்ப்பதற்கு முடிவெடுத்து வழக்கை தொடுத்துள்ளது. ஏழாவது சம்பள கமிஷன் சார்பாக நமக்கு பென்ஷன் மாற்றம் வர எல்லாவிதமான அடிப்படையும் இருந்தும்  நிர்வாகம் இழுத்து அடிப்பது சரியில்லை. இந்த மாநாடு இவைகளை சரியாக விவாதித்து ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். நம்முடைய சார்பாளர்கள் பழைய பத்திரிக்கைகளை  படித்து மாற்று சங்கங்களுடைய நிலைப்பாடுகளை தெரிந்து கொண்டு விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் வாழ்த்துகிறேன். கடினமாக முயற்சி செய்து இந்த பென்ஷன் ரிவிஷனை  நாம் பெற்றுவிட்டால், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு ஊழியர்கள் பென்ஷன் மாற்றம் பெறும்போது நமக்கு அது பொருந்தும். இது இன்னும் சரியான முறையில் மற்ற சங்கத் தோழர்களுக்கும் விளக்கப்பட வேண்டும். இது முடிந்த கையோடு முதல் முதலில் தமிழகத்தில் தான் நம்முடைய கூட்டம் கோவையில்  டிசம்பர் 20ஆம் நாள் பென்சனர்  தினமாக டிசம்பர் 20 அன்று நடைபெறும். எனவே தோழர்களே ஒன்று இணைந்து ஒரே குரலில் நம்முடைய பென்ஷன் மாற்றத்தை நாம் அணுக வேண்டும். அதற்கு அகில இந்திய சங்கத்திற்கும் தற்போது துவங்கி உள்ள 9 சங்கம் உடைய கூட்டணிக்கும் நாம் உறுதியாக ஆதரவளிக்க வேண்டும். இதுவே காலத்தின் கட்டாயம் .
இப்படிக்கு
அருணாச்சலம் 
மாநில உதவி தலைவர்


 

Saturday 26 November 2022

 

அருமை நண்பர்களே ! கடந்த சில ஆண்டுகளாக Coimbatore CGHS welfare Forum  என்ற அமைப்பு கோவையிலே  CGHS Wellness Center அமைவதற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. முக்கியமாக அதன்  தலைவர் திரு. ஹரிகரன், செயலாளர் திரு.மோகன் கிருஷ்ணன்  ஆகியோரும் நமது முன்னாள் PGM  திரு. ஷாஜகான் அவர்களும்  GST துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திருமதி. விலாசினி அவர்களும் கடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.   விரைவில்  நமது மெயின் தொலைபேசி நிலையத்தில் CGHS WELLNESS  செண்டர் துவங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்காக இந்த போரத்தின் கூட்டம் நமது ஓய்வூதியர் சங்க அலுவலகத்தில் கூட்டப்பட்டது. தலைவர் திரு.ஹரிகரன் தலைமை ஏற்று இதுவரை ஆற்றியுள்ள செயல்களை விளக்கினார். மாவட்ட செயலர் திரு.மோகன் கிருஷ்ணன் இதுகாறும் அச்சங்கம் எடுத்த முன் முயற்சிகளை விளக்கினார். இவ்விருவரும் ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் மத்திய அரசின் கார்டைட் பாக்டரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள். நமது முன்னாள் PGM திரு. ஷாஜகான் அவர்கள் சிஜிஎச்எஸ் கோவையில் அமைய எடுத்த முயற்சிகளுக்கு நன்றி கூறினார்கள். திரு ஷாஜகான் அவர்களும் கூட்டத்தில் பங்கேற்று தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். அவ்வமயம், நமது சங்க அலுவலகம் சகாய  வாடகையில் செயல்பட அனுமதி வழங்கிய திரு. ஷாஜகான் அவர்களின்  உதவியை தோழர்  சுப்பராயன் நினைவு கூர்ந்து நன்றி  தெரிவித்தார்.

   GST, கஸ்டம்ஸ் மற்றும் எக்ஸைஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அசிஸ்டன்ட் கமிஷனர் திருமதி. விலாசினி தான் எடுத்த பல்வேறு முயற்சிகளை விளக்கினார். இக்கூட்டத்தில் நமது மாநில சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் B.அருணாசலம் பங்கேற்று வழிகாட்டினார். இக்கூட்டத்தில் அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர்கள் சுப்ரமணியம், சிவராஜ், மத்திய அரசு  ஓய்வூதியர்கள் அமைப்பின் தலைவர் தோழர் சுதாகரன் மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட பல துறைகளில் உள்ள நிர்வாகிகள் பங்கேற்றனர். கோவை நகரிலும் அதனைச் சுற்றியுள்ள திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளிலும்  அங்கீகரிக்கப்பட்ட  மருத்துவ மனைகளை பெறுவதற்காக முயற்சிகளை  எடுக்க கமிட்டிகள் அமைக்கப்பட்டது. விடுபட்டுள்ள பகுதி நிர்வாகிகளையும் சேர்த்து வருங்காலத்தில் சிறப்புடன் செயலாற்ற முடிவு எடுக்கப்பட்டது. நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள் SSG, L.சுப்பராயன்,

R.ராபர்ட்ஸ்  உரையாற்றினர். தோழர்கள் ஜெகதீஸ்வரன்வாசுதேவன், மோகன், சிவராமன், ரங்கசாமி உள்ளிட்டோர் விழா சிறக்க உழைத்தனர். அனைவருக்கும் நன்றி பாராட்டி உரையாற்றினார் மாவட்ட செயலர். அதன் பிறகு அனைவரும் மெயின் எக்ஸ்சேஞ்ச் சென்று  வெல்னஸ் சென்டர் சிறப்பாக உருவாவதை பார்வையிட்டனர்.


Wednesday 23 November 2022

 LIST OF THE PENSIONERS / FAMILY PENSIONERS 

WHOSE  LC / DLC  EXPIRING ON 30-11-2022 (AS ON 18-12-2022).

On receipt of valid Life certificate / Digital Life Certificate on or before 20-12-2022 only, Pension for the month of December 2022 would be drawn.

For submission of DLC through Jeevan Praman, the following parameters may be noted.

1. Sanction Authority :  as  "Telecom"

2. Disbursing agency  :  as " SAMPANN" - Department Of Telecommunications.    

3. Agency                         :  as " Pr.CCA Tamilnadu"

To see the names in the list Please click the link given below.

PLEASE CLICK HERE TO SEE THE NAME LIST

Friday 11 November 2022

 

Today Dy.CCA  Tamilnadu Circle spoke with our Circle secretary and informed that they have released the names of pensioners who had been migrated to SAMPANN from their respective banks. Old PPO and New PPO numbers LC valid dates etc are also displayed.

Some of our members had complained that they had not received SMS from CCA Office and were unable to know of their New PPO number. Now it is clearly mentioned in tabular colums.

To see the names, PPO numbers etc click the link guiven below.,

Click here to view the list

 

அருமைத் தோழர்களே ! தோழியர்களே !!

வணக்கம்.

சென்ற செயற்குழுவில் நமது பென்ஷன் அலுவலகத்தின் வாடகை அதிகரிப்பு குறித்தும் வருகிற பென்ஷனர்ஸ் தினத்தை சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக விவாதித்தோம். அதை ஈடு செய்ய நம்முடைய உறுப்பினர்களிடத்தில் நன்கொடை கேட்க முடிவு எடுக்கப்பட்டது. ஆச்சரியம் என்னவென்றால் நீங்கள் வருடந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேளுங்கள், நாங்கள் கொடுக்கிறோம் என்று பலர் முன்வந்து உள்ளனர். இப்போதுதான் நம்முடைய மாநாட்டை கோவையில் நடத்தினோம்.

 அதனுடைய வரவு செலவு கணக்கை நம்முடைய சங்கம் வெளியிட்டுள்ளது.சுமார் நான்கு லட்சத்திற்கு மேல் வரவு வந்து அகில இந்திய மட்டத்திற்கு மாநாட்டு நிதியும் டெலிகேட் பீசும் ஒரு லட்சம் அளவுக்கு செலுத்தி உள்ளோம். நாம் நிதியை பத்திரமாக பாதுகாத்து அறிக்கையாக வெளிப்படையாக கொடுத்து உள்ளோம். அது முடிந்த கையோடு இந்த பென்ஷன் தினத்திற்கு வாரி வாரி நம்முடைய தோழர்கள் தோழியர்கள் வங்கி மூலமாக அனுப்பி உள்ளனர். இதற்கு அடிப்படை காரணம் நம்முடைய அருமை தோழர் சுப்பராயன் அவர்களுடைய வாட்ஸ் அப் குரூப்பில் நமது சங்கத்தின் செய்திகளை, புதிய உறுப்பினர் சேர்க்கையை, நன்கொடை அளித்தவர்களுடைய பெயர்களை, மாநில, அகில இந்திய செய்திகளை நம்முடைய வாட்ஸ் அப்பில் தோழர் சிவக்குமார் அவர்களும் தோழர் சுப்பராயன் அவர்களும் பதிவு செய்வதே ஆகும்.

  மாதம் மூவாயிரத்துக்கு மேல் வாடகை கொடுக்க வேண்டும். அதைத்தவிர, டிஜிட்டல் முறையை கையாள ஒரு கம்ப்யூட்டர், ஒரு ஸ்கேனிங் மிஷின் போன்றவ இருந்தால் வசதியாக இருக்கும். நம்முடைய தோழர்கள் CGHS போவதற்கு, பல கடிதங்களை நாம் தயாரிக்க வேண்டும். மெம்பர்ஷிப் லிஸ்ட்டை உருவாக்க வேண்டும். கோவையினுடைய பிரச்சனையை மேல்மட்டங்களுக்கும் நிர்வாகத்திற்கும் அனுப்புவதற்கு இந்த டிஜிட்டல் முறையில் இருந்தால்தான் நமது மதிப்பு கூடும். பழைய காலம் போல் இல்லாமல் நாமும் புதிய முறைகளை கையாள வேண்டும். செய்திகள் அனைவருக்கும் சென்றடைவதும் அதனுடைய நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதும் மிக மிக முக்கியம். இந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. பென்ஷன் ரிவிஷனை எதிர்பார்த்து இருக்கிறோம். 65, 70,75 வயது மூப்பு அடையும்போது பென்ஷன் அதிகரிப்பு ஆலோசனையில் உள்ளது. அதேபோன்று மெடிக்கல் அலவன்ஸ் அதிகரிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளதுஇது எல்லாம் வெகு விரைவில் நாம் அடைய நம்முடைய அகில இந்தியச் சங்கம் கடுமையாக முயன்று கொண்டிருக்கிறது. அதனோடு சேர்ந்து பயணிப்பதுதான் ஊழியருக்கு நன்மை பயக்கும். இதை செயலாக்க மேற்கண்ட வசதிகள் தேவை. எனவே தோழர்களே, இதை கவனத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். கேட்டபோதெல்லாம் நிதியை கொடுப்பதும் நம்முடைய அகில இந்திய சங்கத்தின் செயல்பாட்டுக்கு உறுதுணையாக நாம் இருப்பதும் நம்மை நாமே பாராட்டிக் கொள்வது ஆகும். எனவே ஒன்றாய் இருப்போம். முன்னோக்கி  பயணிப்போம். பென்ஷன் சங்கத்தில் மாநிலத்தில் முதன்மையாக இருப்போம். இன்னும் முயன்றால் நம்முடைய எண்ணிக்கையை நாம் 2 ஆயிரத்து கொண்டு வர முடியும்.  நினைக்க முடியாத பல நண்பர்கள் நம்முடன் இணைந்து வருகிறார்கள். இதை எல்லாம் கருத்தில் கொண்டு ஒன்றாய் இருப்போம். உறுதியாக இருப்போம்மென்மேலும் ஓய்வூதியர்  நலம் காப்போம். இதுதான் காலத்தின் தேவை.
தோழமை வாழ்த்துக்களுடன்
B.அருணாச்சலம்,
தமிழ்மாநில உதவி செயலர்
AIBSNLPWA
கோவை.