Wednesday 23 May 2018

அன்புமிகு தோழர்களே/தோழியர்களே,
அனைவருக்கும் வணக்கம்.
நம் கோவை மாவட்ட சங்கத்தின் சிறப்புக்கூட்டம் இம்மாதம் 29-05-2018 அன்று கோவை இரயில் நிலையம் எதிரில் அமைந்திருக்கும் வித்யோதயா ஹாலில் காலை 10-00 மணிக்கு நடைபெற உள்ளது. அச்சிறப்புக் கூட்டத்தில் நம் அன்பழைப்புக்கு இணங்க 
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார்கள். இது குறித்த நோட்டிஸ்கள் நம் உறுப்பினர்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் தபால் இலாகாவில் தற்போது நடைபெற்று வரும் ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக கடிதங்கள் கிடைக்க கால தாமதமாகலாம். எனவே இந்த வலைதள செய்தியை காணும் தோழர்கள்,தோழியர்கள்  மறக்காமல் தங்கள் பகுதியைச்சார்ந்த, மேலும் வலைதள வசதி இல்லாத  மற்ற தோழர்களுக்கும் அவசியம் செய்தியினை தெரிவித்து அவர்களையும் சிறப்புக்கூட்டத்தில் கலந்து கொள்ள செய்ய வேண்டுகிறோம். 
நம்முடைய இன்றைய பிரச்சினைகள், நம் எதிர்கால நடவடிக்கைகள், நாம் அடைய வேண்டியவைகள், அவற்றை அடைய சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் , ஓய்வூதிய மாற்றம் , தமிழ் மாநில மற்றும் அகில இந்திய மாநாடுகள் இவை அத்தனை விஷயங்களையும் விரிவாக , விளக்கமாக சிறப்பு பேச்சாளர்கள் பேசுவார்கள்.
அனைவரும் வருக! அருமைமிகு நம் சங்க சாதனைகளை  கருத்தில் கொண்டு செல்க !!
இவண் 
அருணாசலம் B 
கோவை மாவட்ட செயலர்.


No comments:

Post a Comment